விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே பெரியருளத்துக்காடு பகுதியில் உள்ள ராம் கணேஷ் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்த பில்லிகிரகம் (43) என்பவர், வேலை முடிந்து குளிக்கும்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்தார். அவரை சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து பில்லிகிரகத்தின் உறவினர் ஜெபராஜ் அளித்த புகாரின் பேரில் எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.