சிவகாசி: கார் கண்ணாடி உடைப்பு;2 பேர் மீது வழக்கு...

சிவகாசியை அடுத்த திருத்தங்கல் ஸ்டேண்டர்டு காலனியைச் சேர்ந்த அதிமுக இளைஞரணி மாநில நிர்வாகி வி. எஸ். பலராம் வீட்டில் நள்ளிரவில் கற்களை வீசி, கார்களின் கண்ணாடிகளை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பலராம் அளித்த புகாரின் பேரில், எம். புதுப்பட்டி சங்கர் மற்றும் திருத்தங்கல் மாரீஸ்வரன் ஆகியோர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.