விருதுநகர் மாவட்டம், சிவகாசி முஸ்லீம் தெருவில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் பக்ரீத் திருநாள் முன்னிட்டு முன்னாள் அமைச்சர் K.T. இராஜேந்திரபாலாஜியை சந்தித்து வாழ்த்துகள் பெற்ற இஸ்லாமிய இளைஞர்கள். விருதுநகர் மாவட்டம், சிவகாசி முஸ்லீம் தெருவில் அமைந்துள்ள பெரிய பள்ளிவாசலில் இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி ஒன்றிணைந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
இஸ்லாமியர்களின் தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை ஜூன் 7 இன்று நாடு முழுவதும் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஈகை பெருநாள் என்று சொல்லக்கூடிய பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு முன்னாள் அமைச்சரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான முன்னாள் அமைச்சர் K.T. இராஜேந்திரபாலாஜியை அவரது இல்லத்தில் இஸ்லாமிய இளைஞர்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து தங்களது தியாகத் திருநாளின் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் நிகழ்வின்போது இஸ்லாமிய சங்க நிர்வாகிகள் மற்றும் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.