விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக துணை போலீஸ் சூப்பிரண்டு அனில்குமாருக்கு கிடைத்த புகாரை அடுத்து, போலீசார் திடீர் ஆய்வு நடத்தினர். இதில் திருத்தங்கல் வடக்குரத வீதியில் அனுமதியின்றி மது விற்ற பால்கண்ணன் (58) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 30 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.