விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே மதுபோதையில் சாலையில் சென்றவர்களை தாக்கிய விக்னேஷ்குமார் (30) என்பவரை பொதுமக்கள் பிடித்து, கைகளைக் கட்டி தர்ம அடி கொடுத்து சிவகாசி கிழக்குப் பகுதி போலீசாரிடம் ஒப்படைத்தனர். இவருடன் இருந்த தம்பி மகேஷ்குமார் தப்பி ஓடிவிட்டார். காயமடைந்தவர்களை சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.