சிவகாசி அருகே நாரணாபுரத்தில் குட்டையில் குளிக்க சென்ற 12 வயது கவின்குமார் மற்றும் 8 வயது தருண் ஆகிய இரு பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். கிராம மக்கள் இருவரின் உடலையும் மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சிவகாசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.