விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வெம்பக்கோட்டை சந்திப்பு சாலையில், இருசக்கர வாகனத்தில் சென்ற முதியவர் ஒருவர், எதிரே வந்த கார் மோத முயன்றதாகக் கூறி, நடுரோட்டில் தனது வாகனத்தை நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது. பொதுமக்கள் அவரை சமாதானப்படுத்த முயன்றும் அவர் அடாவடி செய்ததால் நிலைமை மேலும் சிக்கலானது.