சிவகாசி: ஆட்சியர் முன்னிலையில் ஆவேசமடைந்த பெண்....

1பார்த்தது
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே கொங்கன்குளம் ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமினை மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா ஆய்வு செய்தார். அப்போது, நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த சித்ரா என்ற பெண்மணி, அதிமுக பிரமுகர் ஒருவர் 50 ஏக்கர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடு கட்டி வாடகைக்கு விடுவதாகவும், அதை மீட்டு கிராமத்திற்குத் தேவையான அரசு கட்டிடங்களை கட்டித் தர வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தார். 150க்கும் மேற்பட்ட மனுக்கள் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் ஆவேசமடைந்த அவர், அரசு அதிகாரிகள் சும்மா இருக்கிறார்களா என கேள்வி எழுப்பி, முதியவர் ஒருவரின் மனுவைப் பறித்து தூக்கி வீசி, மனு அளிப்பதால் பயனில்லை என ஆட்சியர் முன்னிலையில் ஆக்ரோஷமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி