
தமிழ்நாடு ஓய்வு பெற்றகாவல் துறையினர்நலச்சங்கம்ADMKக்கு ஆதரவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற தமிழ்நாடு ஓய்வு பெற்ற காவல் துறையினர் நலச்சங்க சிறப்பு கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கலந்துகொண்டு தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரினார். ஓய்வு பெற்ற காவலர்கள் அனைவருக்கும் அவர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து, சங்க நிர்வாகிகள் வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக தலைமையிலான NDA கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர்.





























