ஸ்ரீவி: ஐயப்பசி மாத பௌர்ணமி;சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்...

0பார்த்தது
ஸ்ரீவி: ஐயப்பசி மாத பௌர்ணமி;சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்...
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், ஐயப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு நவம்பர் 5 அன்று ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில் சித்தர்களின் சொர்க்க பூமியாக கருதப்படுகிறது. பக்தர்கள் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கோயிலுக்கு அனுமதிக்கப்பட்டனர். வனத்துறையினர் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை எனத் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி