வத்திராயிருப்பில் உள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கியதை தட்டிக்கேட்ட இளைஞரை ஊழியர்கள் கம்பால் தாக்க முயன்றனர். மேலும், இளைஞரின் செல்போனையும் பறித்துக்கொண்டு அடாவடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.