விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வைகாசி மாத பௌர்ணமி பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இருப்பினும், வனத்துறையினர் பக்தர்களுக்கு நீரோடைகளில் குளிக்கவும், இரவு நேரத்தில் மலையில் தங்கவும் அனுமதி இல்லை என அறிவித்துள்ளனர்.