புதுக்கோட்டை அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் மற்றும் போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம், விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே நேந்திரையிருப்பு பகுதியைச் சேர்ந்த மனோகரன், துரைராஜ், பிரதீப், சரவணன், அபூபக்கர், சித்திக், சரத்குமார் ஆகிய ஆறு பேருக்கு கஞ்சா வைத்திருந்த குற்றத்திற்காக தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கு கடந்த 2023 ஆம் ஆண்டு தொடரப்பட்டது.