மதுரை மாவட்டம் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள கரிசல்காளம்பட்டி ஊராட்சிப் பகுதியில் ஆலமரம் அமைப்பின் 247வது வார நிகழ்வாக, ஊராட்சி செயலாளர் தனசேகர் தலைமையில் 440 மரக்கன்றுகள் நடப்பட்டன. நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ் ஏராளமான பொதுமக்கள் இதில் பங்கேற்றனர். மரக்கன்றுகள் நடுவதுடன், அவற்றுக்கு வேலி அமைத்து பராமரிப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதுவரை 8072 மரக்கன்றுகள் மற்றும் 2100 பனை விதைகள் நடப்பட்டு முறையாகப் பராமரிக்கப்பட்டு வருகின்றன.