கொலை முயற்சி வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி கைது

3பார்த்தது
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சத்யகுமார் (40) என்பவர், கடந்த மே 6 ஆம் தேதி திருவில்லிபுத்தூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள வழக்கறிஞர் தர்மராஜ் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்கி, பொருட்களை திருடிச் சென்றார். இது தொடர்பாக திருவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சத்யகுமார், மே 19, 2026 அன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

தொடர்புடைய செய்தி