விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட
பாஜக சார்பில், கோவை கல்லூரி மாணவி கூட்டுப்பாலியல் வன்கொடுமையை கண்டித்து மாநில
பாஜக மகளிர் அணி துணைத்தலைவர் லீலாவதி தலைமையில்
ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட மகளிர் அணித்தலைவர் காளீஸ்வரி முன்னிலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பெண்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க தவறியதாக
திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.