விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்தியன் ஆயில் பெட்ரோலியம் கார்ப்பரேசன் லிட் (IOCL), இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் (ALIMCO) மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 39.60 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்களை வழங்கினார். மேலும், முதுகு தண்டுவடம் பாதித்த 5 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ. 1.05 லட்சம் வீதம் மொத்தம் ரூ. 5.25 லட்சம் மதிப்பில் மின்கல மூன்று சக்கர சிறப்பு நாற்காலிகளையும் ஆட்சியர் வழங்கினார்.