பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் நினைவு இல்லத்திற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி விருதுநகர் மாவட்ட மேலிடப் பார்வையாளர் திரு. பிஸ்வரஞ்சன் மொகந்தி அவர்கள் இன்று நேரில் சென்றார். அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்த கர்மவீரர் காமராஜரின் அறிய புகைப்படங்கள் மற்றும் அவர் பயன்படுத்திய பொருட்களை பார்வையிட்ட அவர், அவற்றை கண்டு மகிழ்ந்ததோடு மனம் நெகிழ்ந்தார்.