விருதுநகர்: விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

75பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தில் ஜூன்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 20.06.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக வளர்ச்சிமன்ற கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்துகொள்வதுடன் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை நேரடியாக மனுமூலம் தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி