விருதுநகர்: படையில் பணிபுரிவோரை சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் கூட்டம்

53பார்த்தது
விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரைச் சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள் மற்றும் படையில் பணிபுரிவோர்களைச் சார்ந்தோருக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் 24.12.2024 அன்று முற்பகல் 11.30 மணிக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 

விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த வீர விருது பெற்றோர், போரில் உயிர்தியாகம் செய்தோரைச் சார்ந்தோர், முன்னாள் படைவீரர்கள், படைவீரர்கள் மற்றும் சார்ந்தோர் குறைகள் ஏதும் இருப்பின் தங்களது அடையாள அட்டை நகலுடன் தங்கள் குறைகளைக் குறித்த மனுவுடன் (இரட்டை பிரதிகளில்) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வருகை தந்து விண்ணப்பம் வழங்கி பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி