சென்னை அரும்பாக்கம் மற்றும் நந்தனம் தேர்வு மையங்களில் ஏற்பட்ட குளறுபடியால், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 முதன்மைத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் அறிவிப்பால் விருதுநகரில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் ஏமாற்றமடைந்தனர். தேர்வு எப்போது நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.