விருதுநகர்-மதுரை சாலையில் உள்ள கேவிஎஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி பொருட்காட்சி மைதானத்தில் நான்காவது புத்தகத் திருவிழா கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த இந்த விழாவில், 7வது நாளான இன்று ஏராளமான பொதுமக்கள் புத்தகங்களைத் தேடி வந்தனர். ஆர்வத்துடன் புத்தகங்களை தள்ளுபடி விலையில் வாங்கிச் சென்றனர்.