விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சியில் முறையாக குப்பைகள், வாறுகால் வசதி, குடிநீர் வசதி செய்து தரவில்லை எனக் கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூரைக்குண்டு ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனு. விருதுநகர் கூரைக்குண்டு ஊராட்சிக்குட்பட்ட அல்லம்பட்டி வாட்டர் டேங்க் முன்பு இரவு நேரத்தில் வாகனங்கள் சிரமமாக இருப்பதால் அந்த பகுதியில் ஹைமாஸ்ட் லைட் அமைத்து தர வேண்டும் என்றும், குல்லூர்சந்தை ரோடு மற்றும் மாத்தநாயக்கம்பட்டி ரோட்டில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதால் வாகனங்கள் செல்லும்போது புழுதி பறந்து விபத்து நடக்காமல் இருக்க சேதமடைந்த சாலைகளை உடனடியாக சீரமைத்து தர வேண்டும், எம்ஜிஆர் நகர் மற்றும் எம்ஜிஆர் காலனியில் தினமும் கொட்டிக்கிடக்கும் குப்பைக்கழிவுகளில் நோய் பரவாமல் தடுக்க தினமும் குப்பைகளை அள்ளி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும் மற்றும் அனுமன் நகர், பிரசாத் ரோடு முதல் எம்ஜிஆர் காலனிவரை குப்பைத்தொட்டி அமைத்து குப்பைகளை சரியான முறையில் அப்புறப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக கிளை செயலாளர் செல்வகுமார் தலைமையில் கூரைக்குண்டு ஊராட்சி செயலாளரிடம் கோரிக்கை மனுவினை அளித்தனர்.