விருதுநகர் பெரியபேராலி ஊராட்சி சின்ன பேராலி கிராமத்தில், விருதுநகர் சாலை அருகே உள்ள உயர் மின் அழுத்த மின்கம்பம் சுமார் 50 வருடங்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் பேராலி-விருதுநகர் சாலையில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மின்கம்பத்தை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.