விருதுநகர் மெயின் பஜார் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து நகராட்சி அதிகாரிகள் இன்று திடீர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு கடைக்கு மொத்தமாகச் சென்று ஆய்வு செய்ததாகவும், வாடிக்கையாளர்களை வெளியேற்றியதாகவும் கூறி வியாபாரிகள் அதிருப்தி அடைந்தனர். இதனைக் கண்டித்து, வியாபாரிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில்
போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு ஏற்பட்டது.