விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மரு. என். ஓ. சுகபுத்ரா, இ. ஆ. ப. அவர்கள் தலைமையில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளைத் தெரிவித்தனர். கடந்த கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவ) விளக்கினார்.