விருதுநகரில் உள்ள அரசு உதவி பெறும் கே.வி.எஸ். பள்ளியில் 10ம் வகுப்பு மாணவன் விஷால், சமூக அறிவியல் ஆசிரியர் குமார் பாடம் நடத்தும்போது எதிர்பாராத விதமாக பிரம்பின் முனை இடது கண்ணில் குத்தி, 90% பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவனின் தந்தை அளித்த புகாரின் பேரில், ஆசிரியர் குமார் மீது விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.