விருதுநகர்: திமுகவினர் தாக்குதல் - மாணிக்கம் தாகூர் எதிர்வினை

963பார்த்தது
விருதுநகர்: திமுகவினர் தாக்குதல் - மாணிக்கம் தாகூர் எதிர்வினை
விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவு: தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் மீது நேற்று இரவு திமுக ஆதரவாளர்களால் கொடூரமான தாக்குதல் நடத்தப்பட்டது. அவரது ஆட்டோ ரிக்‌ஷா சேதப்படுத்தப்பட்டு, கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்த அவதூறு கருத்துகளை கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. காங்கிரஸ் நிர்வாகி காமராஜை கொலை செய்ய முயன்றவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி