அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் முதலிடம் பெற்ற வலையங்குளம் பாலமுருகனுக்கு முதலமைச்சர் சார்பில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள கார் பரிசு வழங்கப்பட்டது. இதையடுத்து வெற்றிபெற்ற பாலமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "BCA கம்பியூட்டர் அப்ளிகேஷன் படித்திருக்கிறேன். எனக்கு அரசு என் படிப்பிற்கு ஏற்ற அரசு வேலை வழங்க வழிவகை செய்யவேண்டும்" என கோரிக்கை வைத்தார்.