'தமிழ்நாட்டின் நலனைக் காக்க தொடர்ந்து திமுகவுடன் இணைந்து களமாடுவோம்' என மனிதநேய மக்கள் கட்சி உறுதியளித்துள்ளது. மேலும் இதுகுறித்து ஜவாஹிருல்லா எம்எல்ஏ கூறுகையில், “
திமுக - மமக உறவு என்பது வெறும் தேர்தல் உறவு மட்டுமல்ல. அதைத் தாண்டிய கொள்கை உறவு. தேர்தல் ஆணையத்தில் கட்சியின் பதிவை மீட்கவே தனிச் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது” என்றார்.