மேற்கு வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்குவங்கத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனிடையே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் மாற்றம் குறித்து மாநில அரசிடம் தகவல் அளிக்கவில்லை என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.