தமிழ்நாட்டில் உள்ள பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “ஆட்சிப் பொறுப்பேற்ற 5 ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்தவும், அங்கு பயிலும் ஏழை, எளிய குழந்தைகளின் கல்வித் தரத்தை உயர்த்தவும் எந்தவித நடவடிக்கையும் திமுக எடுக்கவில்லை. ஆனால், அரசுப் பள்ளிகளில் பயிலும் ஒவ்வொரு மாணவரின் உயிர் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது” என்றார்.