உத்தரப் பிரதேச தேசிய சுகாதார இயக்கம், உயர் இரத்த அழுத்தத்தை தடுப்பதற்கான முக்கியமான ஆரோக்கிய வழிகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, அன்றாட உணவில் உப்பு உட்கொள்ளலை குறைப்பது, யோகா மற்றும் தியானம் மூலம் மன அழுத்தத்தை தவிர்ப்பது, இரத்த அழுத்தத்தை தவறாமல் பரிசோதிப்பது, சமச்சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சிகளை பின்பற்றுவது அவசியம் என்று கூறப்பட்டுள்ளது.