கோடைக்காலத்தில் நிலவும் கடுமையான வெயில் காரணமாக உடலில் நீர்ச்சத்து வேகமாக குறைந்து, தீவிரமான மலச்சிக்கல் ஏற்பட்டு மூல நோய் (பைல்ஸ்) பாதிப்பு அதிகரிக்கிறது. உடல் வெப்பம் அதிகரிப்பதாலும், காரமான உணவுகள் மற்றும் போதிய தண்ணீர் குடிக்காததாலும் மலக்குடல் பகுதியில் உள்ள இரத்த நாளங்களில் அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் கோடை நாட்களில் மூல நோயினால் ஏற்படும் எரிச்சல், வலி மற்றும் இரத்தப்போக்கு போன்ற உபாதைகள் பலருக்கும் கணிசமாக உயர்கின்றன.