தொடர்மழை காரணமாக கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (டிச.02) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சேலம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, புதுச்சேரிக்கும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.