2025 பீகார் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ஆளும் கூட்டணி (என்டிஏ) 191 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் மகாகத்பந்தன் கூட்டணி (இந்தியா) 50 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. இதைத் தொடர்ந்து, ஜனதா தளம் (ஐக்கிய) கட்சி, நிதீஷ் குமார் தொடர்ந்து முதலமைச்சராக நீடிப்பார் என உறுதிசெய்யும் வகையில், சமூக வலைதளங்களில் சூசகமாக தெரிவித்துள்ளது. அதிகாரப்பூர்வ வெற்றி அறிவிப்புக்கு பிறகே முதலமைச்சர் யார்? என்பது தெரியவரும்.