நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் - கயல்விழி தம்பதியின் பெண் குழந்தைக்குச் சீர்வரிசை கொண்டு சென்றது ஏன் என
திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விளக்கியுள்ளார். கயல்விழியின் தந்தை மறைந்த காளிமுத்துவுடன் சிறுவயது முதல் பழகியதால், அவரைத் தனது சொந்தத் தங்கையாகக் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார். தங்கைக்குப் பெண் குழந்தை பிறந்ததால், அண்ணனாகச் சீர் கொண்டு சென்றதாக அவர் கூறியுள்ளார்.