திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணை, உயர்நீதிமன்றம் மதுரைக் கிளையில் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் இன்று (பிப்.2) தொடங்கியது. அப்போது, "சூழலை கருத்தில் கொண்டே 144 தடை விதிக்கப்பட்டது. மதக்கலவரம் ஏற்படும் சூழல் இருந்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது" என மாவட்ட ஆட்சியர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேபோல், “நீதிமன்ற அவமதிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய முகாந்திரம் இல்லை“ என தமிழக அரசு தரப்பு வாதிடப்பட்டது.