உத்தரபிரதேசம் மீரட்டில், திருமணத்திற்கு பின் காதலனுடன் தகாத உறவில் இருந்த அஞ்சலி என்ற பெண், தனது கணவன் ராகுலை காதலன் அஜய்யை வைத்து சுட்டுக் கொன்றார். ராகுலின் உடல் மூன்று தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் வயலில் கிடந்தது. முதலில் வழிப்பறி என நினைத்த போலீசார், மனைவியும் காதலனும் ஊரைவிட்டு தப்பியதை அறிந்து கைது செய்தனர். விசாரணையில், ராகுலை வயலுக்கு அழைத்து அஜய் சுட்டு கொன்றது அஞ்சலியின் திட்டம் என வெளிவந்தது.