ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனைக்குள் இன்று திடீரென புகுந்த காட்டுப்பன்றி, பிரசவ வார்டில் புகுந்து அட்டகாசம் செய்தது. இதனால் அங்கு இருந்தவர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தீயணைப்புத்துறையினர் மற்றும் பன்றி பிடிப்பவர்கள் காட்டுப்பன்றியைப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.