தமிழ்நாட்டில் காலியாகும் ஆறு மாநிலங்களவை இடங்களில் இரு இடங்கள் அதிமுகவிற்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அவற்றில் ஒரு இடத்தை கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளதாக தகவல். மீதமுள்ள இடத்திற்கான வேட்பாளராக மீண்டும் தம்பிதுரையை அறிவிக்க கட்சி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.