2021 தேர்தலில் 5 பவுன் வரையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட நகைக் கடன்களை தள்ளுபடி செய்து திமுக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த முறையும் நகைக்கடன் தள்ளுபடி குறித்து திமுக அரசு விரைவில் அறிவிப்பு வெளியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் இதுகுறித்த முக்கிய முடிவை வெளியிடலாம் என கூறப்படுகிறது. எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கல்வி மற்றும் சுயஉதவி குழு கடன் தள்ளுபடி வாக்குறுதி அளித்துள்ளார்.