ஜூலை மாத மகளிர் உரிமைத்தொகை தவணை கிடைக்காதவர்களுக்கு மணி ஆர்டர் அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் ரூ.1,000 பெற்றவர்களுள் சிலருக்கு தற்போது வரை பணம் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் மட்ட தகவலின்படி, வங்கிக் கணக்கில் e-KYC அப்டேட் செய்யாத பயனாளிகளின் கணக்கில் பணம் செலுத்த முடியாததால் அவர்களுக்கு போஸ்ட் ஆபிஸ் மூலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.