சிங்கப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னை பணிநீக்கம் செய்த நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்து சுமார் ரூ.19 லட்சம் இழப்பீடு பெற்றுள்ளார். ஆடிட்டராக பணியாற்றிய அவர், நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் குறித்து கேள்வி எழுப்பியதாலும், கொரிய மொழி தெரியாததாலும் பணிநீக்கம் செய்யப்பட்டதாக வாதிட்டார். ஆனால் நிறுவனம் கூறிய பணித்திறன் குறைபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவருக்கு இழப்பீடு வழங்க தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.