ஆண்களை விட பெண்களே சோம்பேறிகள்!

73பார்த்தது
ஆண்களை விட பெண்களே சோம்பேறிகள்!
ஆண்களை விட பெண்களே உடல் உழைப்பில் அதிகளவில் ஈடுபடாமல் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை வயது வந்தோர் 49.4 சதவீதம் பேர் உடல் உழைப்பு இல்லாமல் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததால் தொற்று நோய், உடல் பருமன், மனநலம் பாதிப்பு உள்ளிட்ட பிரச்னைகளின் அபாயத்தை அதிகரிக்கலாம் என சமீபத்தில் ஆய்வில் கூறப்படுகிறது. மேலும், மாரடைப்பு, நீரிழிவு நோய், புற்றுநோய், உயர் இரத்த அழுத்தம் ஆகியவை ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.