தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட 2026-27ஆம் நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தில், மகளிர் நலனை மேம்படுத்தும் வகையில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, மாநிலத்தில் சிறப்பாக செயல்பட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அனைத்தும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, குறுந்தொழில் குழுக்களாகத் தரம் உயர்த்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.