இலங்கையில் நடைபெற்று வரும் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில், இன்று கொழும்புவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே 6வது லீக் ஆட்டம் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீராங்கனைகளாக ஸ்மிருதி மந்தனா மற்றும் பிரதிகா களமிறங்கினர். 4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 29 ரன்கள் சேர்த்துள்ளது. இதில் மந்தனா 9 ரன்னிலும், பிரதிகா 19 ரன்னிலும் களத்தில் உள்ளனர்.