தூத்துக்குடி கோவில்பட்டி ரடிகுளம் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் (18) என்பவர், உறவினர் குமார் மகள் கனகலெட்சுமியை காதலித்து வந்தார். பெண் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் நின்றிருந்த சஞ்சய்யை, கனகலெட்சுமியின் தந்தை குமார் மற்றும் உறவினர்கள் மாரிமுத்து, சங்கரநாராயணன் ஆகியோர் பேசித் தீர்ப்பதாகக் கூறி அழைத்துச் சென்று கத்தியால் சரமாரியாக குத்தினர். சஞ்சய் உயிரிழந்த நிலையில், காதலியின் குமார், உறவினர்கள் ஆகியோரை கைது செய்தனர்.