ஆந்திர மாநிலம் பரிகாகுளம் மாவட்டம் பாதபட்டினத்தை சேர்ந்தவர் நல்லி ராஜூ (27). இவருக்கும் மவுனிகா (25) என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், மவுனிகாவிற்கு அதே ஊரை சேர்ந்த உதயகுமார் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. அதை கைவிடுமாறு ராஜூ எச்சரித்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த மவுனிகா உணவில் தூக்க மாத்திரையை கலந்து ராஜூவிற்கு கொடுத்துள்ளார். பின்னர், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த ராஜூவை உதயகுமார் உதவியுடன் மவுனிகா தலையணை வைத்து கொலை செய்துள்ளார்.