சென்னையில் நள்ளிரவில் தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் இளைஞர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு பல அரசியல் தலைவர்களும் பொது மக்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த இழிவான செயலில் ஈடுபட்ட ஆந்திராவைச் சேர்ந்த சாய் தேஜா (25) என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலேயும் அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.